Class 1

வகுப்பு 1
தலைப்பு: எழுத்திலக்கணம் – ஓரறிமுகம்
தொல்காப்பியம் – மூன்று அதிகாரங்கள்.
எழுத்து, சொல், பொருள்.
அதிகாரத்திற்கு 9 இயல்கள், ஆக 3×9 = 27
நூற்பாக்கள் 1595 – இளம் பூரணர்.
நூற்பாக்கள் 1611 – நச்சினார்க்கினியர்.
இளம்பூரணரின் உரையே 3 அதிகாரங்களுக்கும் கிடைத்துள்ளதனால், 1595 நூற்பாக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

எழுத்ததிகாரத்தில் மூன்று பிரிவுகள்:
எழுத்திலக்கணம், பிறப்பிலக்கணம், புணர்ச்சியிலக்கணம்.
எழுத்திலக்கணத்தில் நூல் மரபு, மொழிமரபு -2 இயல்கள். 
பிறப்பிலக்கணத்தில் பிறப்பியல் – 1 இயல்
புணர்ச்சியிலக்கணத்தில்
புணரியல், தொகை மரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் 6 இயல்கள்
ஆக மொத்தம்:9 இயல்கள்.(எழுத்திலக்கணம்:2, பிறப்பிலக்கணம்:1, புணர்ச்சி:6)
இவற்றில் முதலில் நூன்மரபு என்ன சொல்கிறது என்று பார்ப்போம்!

முன்னர் குறிப்பிட்ட எழுத்திலக்கண அறிமுகம் மீள்பார்வை
நூன்மரபு: நூல் + மரபு.
விளக்கம்
எழுத்துகளின் தொகை, வகை, ஒலியளவென்ற மாத்திரை, வரிவடிவம் என்பவற்றுடன் தொடங்குதல் நூன்மரபு.
இவ்வியலில் எழுத்திலக்கணம் தொகுத்துக் கூறலும் நூன்மரபே.
எழுத்துகள் ஒலிகளே என்றும், 30 எழுத்தொலிகளை உயிர், மெய் எனப் பிரிக்கலாம் என்றும்,
உயிரில் குற்றெழுத்து 5, இவற்றுக்கு மாத்திரை 1 என்றும்,
நெட்டெழுத்து 7, மாத்திரை 2 என்றும்,
மெய்யெழுத்துகள் 3 வகை, இவற்றுக்கு மாத்திரை 1/2 என்றும்,
சார்பொலிகள் (எழுத்துகள்) 3, இவற்றுக்கும் 1/2 மாத்திரை என்றும்,

உயிர், மெய்களுக்கு இன எழுத்துகள் உள்ளன என்றும், உயிரும் மெய்யும் கூடி வழங்கும் உயிர்மெய் 216. ( 12×18 ) என்றும்,
ஆய்தம் 1 , ஆக மொத்தம் = 247 என்றும்,
சுட்டு எழுத்து 3, வினா எழுத்து 5 என்றும்,
குற்றியலுகரம் 6 வகை என்றும்,
முற்றியலுகரம் 3 வகை என்றும்,
மெய்மயக்கம் 2 வகை, உடனிலை மெய்மயக்கம், வேற்றுநிலை மெய்மயக்கம்
என்றும் நூல்மரபு விளக்குகிறது.

மேலும், எழுத்தின் பெயர், முறை, தொகை, வகைகளுக்கான நூற்பா இது :

“எழுத்தெனப் படுபஅகரமுதல் னகர இறுவாய்
முப்பஃ தென்ப சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே”
( தொல்: எழுத்ததிகாரம்: 1)

“மொழிமுதற் காரண மாமணுத் திரளொலி
எழுத்தது முதல்சார் பெனவிரு வகைத்தே”
( நன்னூல், எழு: 58)

சார்பெழுத்தென்பது:

“அவைதாம், குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்த மென்ற முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன” (தொல் 2)


“உயிர்மெய் யாய்த முயிரள பொற்றள பஃகிய இஉஐஔ
மஃகான் தனிநிலை பத்துஞ் சார்பெழுத் தாகும்” ( நன்னூல்: 60)

உயிரில் குற்றெழுத்து 5, இவற்றுக்கு மாத்திரை 1 என்றும்,
அ இ உ எ ஒ – 1 மாத்திரை

நெட்டெழுத்து 7 , மாத்திரை 2 என்றும்,
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ – 2 மாத்திரை

மெய்யெழுத்துகள் 3 வகை, இவற்றுக்கு மாத்திரை 1/2 என்றும்,

வல்லினம்: க், ச், ட், த், ப், ற்
மெல்லினம்: ங், ஞ், ண், ந், ம், ன்
இடையினம்: ய், ர், ல், வ், ழ், ள்

சார்பொலிகள் (எழுத்துகள்) 3, இவற்றுக்கும் 1/2 மாத்திரை என்றும்

Quiz1

1 / 3

தொல்காப்பியத்தில் அதிகாரங்கள் எத்தனை?

2 / 3

மாத்திரையை அளவிடும் கருவிகள் எவை?

3 / 3

” பன்னீருயிரும் மொழி …… ” — இதை நிறைவு செய்க.

Your score is

The average score is 92%

0%