Class 12

இலக்கண வகுப்பு – 12
தொல்: எழு: இயல் 8, புள்ளி மயங்கியல்11/02/26

சென்ற வகுப்பிலே உயிர் மயங்கியலை நிறைவு செய்தோம். இன்று 8 ஆவது இயலான
‘ புள்ளி மயங்கியலை’ ஆரம் பிக்கிறோம்.

இவ்வியலில் 110 நூற்பாக்களுள்ளன. சொற்களின் ஈற்றில் நிற்கும் மெய்யெழுத்துகளான ஞ் ண் ந் ம் ன் மெல்லினங்களும், ய் ர் ல் வ் ழ் ள் ஆகிய இடையினங்களும், எவ்வாறு புணர்கின்றன என்று தொல்காப்பியம் விளக்கிச் செல்கிறது. ஆக. இப் 11 மெய்யீறுகளுள் சில முக்கியமானவை புணரும் முறையை இப்போது காண்போம்: (slide1) copied

1
வேற்றுமையில் ணகரவீறு வருமாறு காட்டுகிறார்.
” ணகார இறுதி வல்லெழுத் தியையின்
டகார மாகும் வேற்றுமைப் பொருட்கே ” ( 7-303)

இ-ள்:
ணகாரவீற்றுப் பெயர் வல்லெழுத்தான முதலெழுத்தோடு இயையின் வேற்றுமைப் புணர்ச்சியின்கண் டகாரமாய் முடியும் எ-று (slide2)

எ-டு:
மண்+குடம் = மட்குடம்
மண்+சாடி = மட்சாடி
மண்+தூதை = மட்தூதை
மண்+ பாண்டம் = மட்பாண்டம் (slide 3)

2
இங்கு மகரவீறு முன் வல்லினம் மிகும் வழி சொல்கிறார்:
” மகர இறுதி வேற்றுமை ஆயின், துவரக் கெட்டு வல்லெழுத்து மிகுமே “( 15-311)

எ-டு:
மரம்+கொப்பு = மரக்கொப்பு
மரம்+செதிள்= மரச்செதிள் (slide3) copied

3
அகம் என்ற மகரவீறின் முன் கை வரும்போது புணரும் வகை இவ்வாறு வரும்:
” அகமென் கிளவிக்குக் கைமுன் வரினே
முதனிலை ஒழிய முன்னவை கெடுதலும்
வரைநிலை யின்றே யாசிரியர்க்கு
மெல்லெழுத்து மிகுதல் ஆவயினான ” ( 20-316)

இ-ள்:
அகமென்னும் சொல்லிற்கு கை எனும் சொல் முன்வரின், முன்னின்ற அகரம் கெடாது நிற்க, அதன் முன்னின்ற ககரமும் மகரவொற்றும் கெட்டு முடிதலும், கெடாது முடிதலும் ஆசியர்க்கு நீக்கும் நிலைமை இல்லை, அவை கெட்டவழி மெல்லெழுத்து மிக்கு முடியும் எ-று (slide4) copied

எ-டு:
அகம்+கை = அங்கை/அகங்கை

அப்பர் சுவாமிகள் குறுந்தொகையில்,

” குசையும் அங்கையில் கோசமும் கொண்டஅவ்
வசையின் மங்கல வாசகம் வாழ்த்தவே…”
என்றருளுகிறார். -copied

திருச்செந்தூர்த் திருப்புகழும்
” அங்கை மென்குழ லார் வார்போலே சந்தி நின்றய
லோடே போவார் …”
என்கிறது.

அபிராமி அந்தாதியும்

” ஆத்தாளை …ஐங்கணைப்
பாசாங்குசமும் கரும்பு வில்லும் அங்கை சேர்த்தாளை ….என மொழிகிறது. (slide5)

4
‘ இலம் ‘ முன் ‘ படு ‘ ( பாடு) என்ற புணர்ச்சி நிலை கூறியது இது :
” இலமென் கிளவிக்குப் படுவருகாலை
நிலையலும் உரித்தே
செய்யு ளான ” ( 21-317)

இ-ள்:
இலம் என்ற சொல்லிற்கு படு எனும் சொல் வருமொழியாய் வருங் காலத்தே, முன் சொன்னவாறே, செய்யுட்கண் மகரவீறு கெடாது நின்று முடியும் எ-று slide 6 copied

எ-டு:
இலம்+படு = இலம்படு (இல்லாமை, வறுமை)
சிலப்பதிகாரத்திலே இளங்கோவடிகள் இம் மொழியைக் கையாள்கிறார்:
” ….யாவும் சலம்புணர் கொள்கைச் சலதி யொடாடி, குலந்தரு வான்பொருள் குன்றந் தொலைந்த
‘ இலம்பாடு ‘ நாணுத் தரும்
எனக்கு என்ப
நலங்கேழ் முறுவல் நகைமுகம் காட்டி ‘ சிலம்புள கொண்ம் ‘ என ..”
( கொண்ம் என்றது மகரக் குறுக்கம். கொள்ளும் என்பது பொருள், மருளும் என்றது மருண்ம் என்றது போல) (slide 7) copied

5
‘ ஆயிரம் ‘ என்ற எண்ணுப் பெயர்ப் புணர்ச்சி:

” அத்தொடு சிவணும் ஆயிரத் திறுதி
ஒத்த எண்ணு முன்வரு காலை ” ( 22-318)

இ-ள்:
ஆயிரம் என்னும் எண்ணுப் பெயரின் மகரமெய் தனக்கு ஒத்த மொழியாய் பொருந்தின எண்ணுப் பெயர் தம்முன் வருங்காலை, ‘ அத்து ‘ சாரியை பெற்று வரும் எ-று (slide8)

எ-டு:
ஆயிரம்+ஒன்று = ஆயிரத்தொன்று, இவ்வாறே ஆயிரத்திரண்டு, மூன்று எனவொட்டுக.

ஔவை தனிப்பாடல்:
” ஆர்த்தசபை நூற்றொருவர் ஆயிரத்தொன்றாம் புலவர்
வார்த்தை பதினாயிரத்
தொருவர் ..” என்றார். (slide 9)

6
‘தமிழ்’என்னும் சொல் புணரும் விதி இது.

” தமிழென் கிளவியும் அதனோ ரற்றே ” ( 90-386)

இ-ள்:
தமிழ் என்னும் சொல்லும் அதனோடு ஒரு தன்மைத்தாய் வல்லெழுத்து மிகுதலேயன்றி, அக்கும் பெற்று முடியும் எ-று (slide 10)

எ-டு:
தமிழ்+கூத்து = தமிழ்க்கூத்து
தமிழ்+சங்கம்= தமிழ்ச் சங்கம்

‘ அக் ‘ பெற்று வரும் போது,

தமிழ்+கூத்து = தமிழக் கூத்து
தமிழ்+சங்கம் = தமிழச் சங்கம்

பாரதி இதனைத் தன் பாட்டுள் வைக்கிறார்:
” விதியே விதியே, தமிழச் சாதியை என் செய நினைத்தாய் எனக்குரையாயோ ?” (slide 11)

7
ஏழ் என ழகரவீறு புணருமாறு இது:

” அளவு நிறையும் எண்ணும் வருவழி
நெடுமுதல் குறுகலும் உகரம் வருதலும்
கடிநிலை இன்றே ஆசிரியர் க்க ” ( 94-390)

இ-ள்:
அளவுப் பெயரும், நிறைப் பெயரும், எண்ணுப் பெயரும் வருமொழியாய் வருமிடத்து, நெடுமுதல் குறுகுதலும் உகரம் வருதலும் நிகழும் எ-று (slide 12)

எ-டு:
ஏழ்+கடல் = எழுகடல், ஏழு கடல் – இது அளவுப் பெயர்
ஏழ்+நாழி= எழுநாழி – இது நிறைப்பெயர்
ஏழ்+மூன்று= எழுமூன்று – இது எண்ணுப் பெயர்

— புள்ளி மயங்கியல் நிறைவு –