இலக்கண வகுப்பு – 11
தொல்: எழு: இயல் 7, உயிர் மயங்கியல் தொடர்ச்சி, 04/02/26
சென்ற வகுப்பிலே அகரவீறும், ஆகாரவீறுமான உயிர் புணர்ந்தவாறு பார்த்தோம். அடுத்து இகரவீறு புணர்வதெங்ஙனம் என விளக்கப்படுகிறது.
1
” இகர இறுதிப் பெயர்நிலை முன்னர்
வேற்றுமை யாயின் வல்லெழுத்து மிகும் ” ( 33-236)
இ-ள் : இகரவீற்றுப் பெயர்ச்சொல் முன்னர், அதிகாரத்தால் கசதப முதன் மொழியாய் வந்தவழி, வேற்றுமைப் பொருட் புணர்ச்சியாயின், தமக்குப் பொருந்தின வல்லெழுத்து மிக்கு முடியும் எ-று
எ-டு
கிளிக்கால், கிளிச்சிறகு, கிளித்தலை, கிளிப்பேச்சு.
ஒரு தனித்துவமான புணர்ச்சியைத் தொல்காப்பியர் இங்கு காட்டுகிறார்.
இகரவீறு கொண்ட நாழி என்ற சொல், உரி என்ற வருமொழி வரும்போது ‘நாடுரி ‘ எனப் புணரும் என்கிறார்.
” உரிவரு காலை நாழிக் கிளவி
இறுதி இகர மெய்யொடும் கெடுமே
டகார மொற்றும் ஆவயி னான ” ( 38- 241)
இ-ள் :
உரி எனுஞ் சொல் வருமொழியாய் வந்த காலத்து, ‘ நாழி ‘ எனுஞ் சொல் தன்னீற்றில் நின்ற இகரம் தானூர்ந்த மெய்யொடுங் கெடும். அவ்விடத்து ‘ டகரம் ‘ ஒற்றாய் வரும் எ-று -copied
நாழி+உரி = நாடுரி.
( நாழி, உரி என்பன பண்டைய முகத்தலளவை. நாழி = ஒருபடி, உரி = 1/2 படி.)
ஒளவை நல்வழியில்,
” உண்பது நாழி உடுப்பது நான்கு முழம் ” என்கிறார்.
காஞ்சியிலே இறைவன் தந்த இரு நாழி நெல்லைக் கொண்டு, அம்பாள் 32 அறங்களை வளர்த்தாள். அதனால் அவளுக்கு ‘ அறம் வளர்த்த நாயகி ‘ என்ற பெயராயிற்று.-copied
இதனை அபிராமிபட்டர்,
” ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு அண்டமெல்லாம்,
உய்ய அறஞ் செய்யும் உன்னையும் போற்றி….57 -copied
2
ஈகாரவீற்றின் புணர்ச்சி இயல்பு: இது வல்லினம் மிகுத்தும், இன் என்ற சாரியை பெற்றும் குறைந்தளவே புணரும்.
எ-டு: ஈக்கால், ஈச்சிறகு,
ஈயின் கால், ஈயின் சிறகு -copied slide6
3
உகரவீறு புணரும் வகை சொல்கிறார். மூவகைச் சுட்டெழுத்துகளில் உகரச் சுட்டு வல்லினம் மிக்குவரப் புணரும்.
எ-டு:
உ+காளை = உக்காளை. உச்சிறை, உத்தடம், உப்படம். மூவகைச் சுட்டுகளும் தன் என்ற சாரியை பெற்றும் புணரும். அதன் கடை, இதன் சடை, உதன் தடம். Copied, slide 7
4
அடுத்து ஊகாரவீறு;
” பூவென ஒருபெயர் ஆஇயல் பின்றே
ஆவயின் வல்லெழுத்து மிகுதலு முரித்தே ” ( 66-269)
இ-ள்:
பூ எனும் ஊகாரவீற்றுப் பெயர், மெல்லெழுத்து மிக்கு முடியும், வல்லெழுத்து மிக்கு முடிதலுமுள எ-று copied, slide 8
பூ+கொடி = பூங்கொடி/ பூக்கொடி
பூ+செடி = பூஞ்செடி/ பூச்செடி
பூ+ தாமம் = பூந்தாமம்/பூத்தாமம்
பூ+பந்து = பூம்பந்து/பூப்பந்து copied . slide 9
5
ஏகாரவீறு :
ஏகாரம் இறுதியாக வருதலரிது.
ஏகாரம் இடைச் சொற்களாகவும், தேற்றங்களாகவும் புணரும். வேகம், வேகவைத்தல், மறைத்தல் போன்ற பொருளைக் குறிக்க ‘ வே ‘ என்ற எழுத்துப் பயன்படுகிறது.
வே+குடம் = வேக்குடம். -copied slide 10
மேலும் எருது, எருமை போன்ற விலங்கை ‘சே’ என்ற சொல்லாற் குறிப்பர். இவை ‘ ஓரெழுத்தொருமொழி’ ஆகும். இச்சொல் ‘இன்’ சாரியை பெற்றுப் புணரும்.
சே+கொம்பு = சேவின் கொம்பு. -copied, slide 11
6
ஐகாரவீற்றுப் புணர்ச்சி பற்றியது இது :
பனை என்ற சொல்லினீறு ஐகாரம் பெற்று முடிந்தது. இது ‘ அம்’ என்ற சாரியை பெற்றுப் புணர்தல் காணலாம்.
எ-டு : பனை+காய் = பனங்காய், இவ்வாறே பனம்பழம், பனம்பூ என அம் பெற்று வந்தன.
Copied, slide 12
மேலும் பனையும் அட்டும் புணரும் வகை சொல்கிறார் தொல்காப்பியர்.
” பனையின் முன்னர் அட்டு வருகாலை
நிலையின் றாகும் ஐயென் உயிரே
ஆகாரம் வருதல் ஆவயி னான ” (82-295)
இ-ள்:
பனை என்னும் சொல்லின் முன்னர், அட்டு எனுஞ்சொல் வருமொழியாய் வருங்காலத்து, ஐயெனுமுயிர் நிற்றல் இன்றாம். அவ்விடத்து ஆகாரம் வந்து அம்மெய்ம்
மேல் ஏறிமுடியும் எ-று.
— உயிர் மயங்கியல் நிறைவு —