இலக்கண வகுப்பு – 10
தொல்:எழு:உயிர்
மயங்கியல் – இயல் 7
கடந்த வகுப்பில் உருபியலை நிறைவு செய்திருந்தோம்.
இவ்வியலில் உயிர் ஈறுகள் எவ்வாறு புணர்கின்றன என்பதைக் கற்கப் போகின்றோம்.
தூலவுடல் இயங்க உயிர் எந்தளவு முக்கியமோ, அந்தளவுக்குத் தமிழ் இலக்கணத்திற்கு இந்த உயிர்மயங்கியலும் முக்கியமாகக் கொள்ளப் படுகிறது. இங்கு உயிர் 12 எழுத்துகளும் புணர்ச்சி நிலையில் எவ்வாறு நடந்து கொள்கின்றன என்பதை இவ்வியல் விளக்குகிறது.
உயிர் எழுத்தொன்றில் முடிகின்ற சொற்கள், நிலைமொழியாக நிற்கும் காலை, அவ்வுயிரின் முன்னால் கசதப ஆகிய வல்லெழுத்துகளில் தொடங்குகின்ற சொற்களும், சிறுபான்மையாக மற்றைய எழுத்துகளில் தொடங்கும் சொற்களும் வந்து புணர்வது இவ்வியலில் விரிவாக விளக்கம் பெற்றுள்ளது.
அப்புணர்ச்சி நிலைகள் இங்கு அகரவரிசைக் கிரமமாகச் சொல்லப் பட்டுள்ளன. ‘ மயங்குதல் ‘ என்றது கலப்பதையும், புணர்வதையும் குறித்து நிற்கிறது.
1
அகரவீற்றுப் பெயர் அல்வழியிற் புணரும் முறையை இத் தலைத் சூத்திரம் விளக்குகிறது. ( வேற்றுமை உருபுகளுடன் புணர்ந்தால் அது ‘ வேற்றுமைப் புணர்ச்சி’,
அவையல்லாத வேறு வழிகளில் புணர்ந்தால் அது ‘ அல்வழிப் புணர்ச்சி’ எனத் தெளிக!
” அகர விறுதிப் பெயர்நிலை முன்னர்
வேற்றுமை யல்வழிக் கசதப த்தோன்றின் தத்தம் ஒத்த ஒற்றிடை மிகுமே “
(7-204)
இ-ள்:
அகரமாகிய இறுதியை உடைய பெயர்ச் சொல்லின் முன்பு வேற்றுமை அல்லாத அல்வழிக்கண் கசதப முதன்மொழிகள் வருமொழியாக வருமிடத்து, தத்தமக்குப் பொருந்தின அக் கசதப க்களாகிய ஒற்று இடைக்கண் மிகும் எ-று
எ-டு:
நீள+கண் = நீளக்கண். நீல+சேலை = நீலச்சேலை.
நீள+தட்டு= நீளத்தட்டு.
நீள+பாதை= நீளப்பாதை.
இதேபோல அகல வுக்கு மொட்டுக.
2
அகரவீறு புணர்ந்தவாறு சொன்ன தொல்காப்பியர், அவ்வகரவீற்றின் வினைச்
சொல்லும், இடைச் சொல்லும் எவ்வாறு புணர்ந்து முடியும் என இச் சூத்திரத்தே சொல்கிறார்.
” வினைஎஞ்சு கிளவியும்
உவமக் கிளவியும் எனவென் எச்சமும் சுட்டின் இறுதியும் ஆங்க என்னும்
உரையசைக் கிளவியும்
ஞாங்கர்க் கிளர்ந்த வல்லெழுத்து மிகுமே ” ( 2-205)
இ-ள்:
அகரவீற்று வினையெச்சமாகிய சொல்லும், உவமச் சொல்லும், ‘ என ‘ என்று சொல்ல வருகின்ற எச்சச் சொல்லும், சுட்டாகிய அகரவீறும், ‘ ஆங்க ‘ என்று சொல்லப்படும் உரையசையாகிய சொல்லும் மேலைச் சூத்திரத்தே சொன்ன வல்லெழுத்து மிக்கு முடியும் எ-று -copied
( பதப் பொருள் : வினை யெச்சம் = வினையை/வினை முடிவைக் கொண்டு எச்சமாக நிற்கும் சொல்.
உவமச் சொல் = உவமை உருபுகள். போல, போன்ற, ஒப்ப, புரைய, மான, நிகர, கடுப்ப, நிகர்க்க, அன்ன எனப்பல.
என – எச்சச் சொல்
சுட்டகரவீறு = அ
உரையசைச் சொல் = ஒரு வாக்கியத்தின் ஓட்டத்தைச்
சீராக்கவும், அழுத்தத்தைகக் கூட்டிக் கொள்ளவும், சொற்களைச் சேர்த்துக் கொள்ளவும் பயன்படுகின்ற ஓரிடைச் சொல். ஆங்க, அந்தில் என்பன தொல்காப்பியர் காட்டும் ‘ உரையசைச் சொல்’ களாகும்.) -copied
இவ்வகைச் சொற்கள் வல்லெழுத்தோடு புணரும் போது அவ்வல்
எழுத்துகளான கசதப க்கள் மிகும் என்கிறார்.
எ-டு: மேலே
1.உண்ண+கொண்டான்= உண்ணக் கொண்டான்.
2
புலிபோல+கிழித்தான்= புலிபோலக் கிழித்தான்
3
என+கூறினான்= எனக் கூறினான்
4
அந்த+கனி= அந்தக் கனி/அக்கனி
5
ஆங்க இளம்பூரணரின் பழைய உரை.
( ‘ உண்ண ‘ என்ற இன்றைய வழக்கு, பழம் செய்யுள் வழக்கில் ‘ உண ‘ என்று வருவதால் ‘ உணக் கொண்டான் ‘ என்றார். -copied
சம்பந்தப் பெருமானும்,
” சிறையாரும் மடக்கிளியே இங்கேவா தேனொடு பால்
முறையாலே உணத் தருவேன் மொய்பவழத் தொடு தரளம்… என்றருளியமை காண்க.
3
” சுட்டின் முன்னர் ஞநம த்தோன்றின்
ஒட்டிய ஒற்றிடை மிகுதல் வேண்டும் ” ( 3-206)
இ-ள்:
அகரச் சுட்டின் முன்னர் ஞநம க்கள் முதலாகிய மொழி வருமொழியாய்த் தோன்றின், தத்தமக்குப் பொருந்திய ஒற்று இடைக்கண்ணே மிகுதல் வேண்டும் எ-று
எ-டு:
அந்த+ஞானம் = அஞ்ஞானம்
அந்த+நூல் = அந்நூல்
அந்த+மணி = அம்மணி -copied
4
அகரவீறு வன்கணத்தொடும், மென்கணத்தொடும் புணரும்முறை பற்றி சென்ற வகுப்பில் கற்றோம். இங்கு அதனைத் தொடர்கிறோம்.
இச்சூத்திரத்தில் இடைக்கணம் அகரவீற்றோடு எப்படிப் புணரும் எனத் தொல்காப்பியர் குறிக்கிறார்.
” யவ முன் வரினே வகரம் ஒற்றும் ” ( 4-207)
இ-ள்:
யகர வகரம் முதன் மொழியாகச் சுட்டின் முன்னே வரின், இடைக்கண் வகரம் ஒற்றும் எ-று-copied
எ-டு:
அ+யாழ் = அவ்யாழ்.
அ+வளை= அவ்வளை
அ+யானை= அவ்யானை
அ+வண்டு= அவ்வண்டு -copied
5
‘ வாழிய ‘ எனுஞ் சொல் புணருமாறு காட்டுகிறார்.
” வாழிய வென்னுஞ் சேயென் கிளவி, இறுதி அகரம் கெடுதலு முரித்தே “
( 9-212 )
இ-ள்:
‘ வாழிய ‘ என்று சொல்லப் படுகின்ற வாழுங்காலம் அண்மையன்றிச் சேய்மைய என்றுணர்த்தும் சொல்; தன்னிறுதிக்கண் அகரமும், அதனாற் பற்றப்பட்ட யகரமும் கெடாது முடிதலும், கெட்டு முடிதலும் உரியதாம் எ-று -copied
எ-டு:
வாழிய+மன்னா = வாழி மன்னா. வாழிய+தமிழ்= வாழிதமிழ்.
( இங்கு யகரம் கெட்டது)
” வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித் திருநாடு ” – பாரதி
( இங்கு கெடாமல் பாடியுள்ளார்)
சேக்கிழார் பெருமானும்,
” வாழிமாதவர் ஆலால சுந்தரர் வழியிடை அருள் செய்த …” என்றருளி ‘ வாழிய மாதவர் ‘ என்றதை
தொல்காப்பியர் வழி நின்று, ‘பற்றப்படும் யகரமும் கெடும் ‘ என்ற சூத்திரப்படி, ” வாழி மாதவர் ” என்றருளியமை காண்க. -copied
இன்னுமொன்று :
சிலம்பின் கானல்வரிப் பாடலிலே இளங்கோவடிகள்;
“…கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி, .. பெருங் கற்பு என்றறிந்தேன் வாழி காவேரி …. நடந்தாய் வாழி காவேரி… வளனே வாழி காவேரி.. ” எனப் பாடுகிறார். -copied
6
அடுத்து ஆகாரவீற்றுப் புணர்ச்சி இது.
” மாமரக் கிளவியும் ஆவும் மாவும்
ஆமுப் பெயரும் அவற்றோ ரன்ன
அகரம் வல்லெழுத்தவை அவண்நிலையா
னகரம் ஒற்றும் ஆவும் மாவும் ” (29-232)
இ-ள் :
மாமரமாகிய சொல்லும், ஆ எனும் சொல்லும், மா எனும் சொல்லுமாகிய அம்மூன்று பெயர்ச் சொற்களும், மெல்லெழுத்துப் பெற்று முடிதலுமுடையன. அவற்றுள் ஆவும் மாவும், முன்பெற்று நின்ற அகரமும், வல்லெழுத்துமாகிய அவை, அவ்விடத்து நிலை பெறாமல் னகரம் ஒற்றாகப் பெற்று முடியும் எ-று
எ-டு:
மா+கொப்பு = மாங்கொப்பு
மா+தோல்= மாந்தோல்
மா+பூ= மாம்பூ
ஆ+கன்று = ஆன்கன்று
ஆ+செவி = ஆன்செவி
மா+கோடு= மான்கோடு
மா+ செவி = மான்செவி.
— இவ் வகுப்பு நிறைவு –