Class 15

இலக்கண வகுப்பு – 15
தொல்:சொல்லதிகாரம், இயல் 1, ‘ கிளவியாக்கம் ‘
எழுத்ததிகாரத்தை நிறைவு செய்த தொல்காப்பியர், அடுத்து சொல்லதிகாரத்தை ஆரம்பம் செய்கிறார்.
இதில் 463 நூற்பாக்களுள்ளன. சொல்லதிகாரத்தின் 9 இயல்களில், முதல் 4 இயல்களும் தொடர் இலக்கணத்தையும், அடுத்த 4 இயல்களும் தனிச் சொற்களின் இலக்கணத்தையும், 9 ஆவது இயலானது முதலெட்டு இயல்களிலும் சொல்லாமல் விடப்பட்ட இலக்கணங்களையும் எடுத்து விளக்குகின்றன. Copied

” எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே ” என்கிறார் தொல்காப்பியர். சொல் என்பது எழுத்தொடு புணர்ந்து, பொருள் அறிவுறுத்தும் ஓசை என்கிறார் இளம்பூரணர்.

சொல்லுக்கு, மொழி கிளவி எனப்பல பெயர்களுள. இச் சொற்கள் எவ்வாறு ஆக்கப்படுகின்றன என்பதை விளக்குதலால், இவ்வியலுக்கு ‘ கிளவி யாக்கம் ‘ எனப் பெயர் ஆயிற்று. மொழியின் பயன்பாட்டுக்கேற்பச் சொற்களை ஆக்கிக் கொள்வது அல்லது இயற்றிக் கொள்வதே’ கிளவியாக்கம் ‘ எனப்படுகிறது. எனவே எழுத்துகளைக் கொண்டு பொருள் தருகின்ற சொற்களை ஆக்கிக் கொள்ளுதலே ‘ கிளவியாக்கம் ‘ எனத் துணியலாம். Copied

” நொய்யும் (தவிடு), நுறுங்கும் (குறுணை) நீக்கி அரிசி ஆக்கினாரை ‘அரிசி ஆக்கினார் ‘ என்பது போல, குற்றம் களைந்து சொற்களை ஆக்கிக் கொண்டமையால், இது
‘ கிளவியாக்கம் ‘ ஆயிற்று என்பார் சேனாவரையர்.
ஆகவே பிழையற்ற சொற்களைக் கொண்டு, பிழையற்ற சொற்றொடர்களை ஆக்கிக் கொள்வதே கிளவியாக்கம் என மேலும் மொழியலாம்.
ஆதலால் வழுநிலை, வழாநிலை, வழுவமைதி நிலை என மூன்று நிலைகளையும் இவ்வியல் எடுத்தியம்புகிறது. Copied
1
திணை:
இரு முக்கிய திணைகளாகிய உயர்திணை, அஃறிணை பற்றி இங்குரைக்கிறார்.

” உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே
ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே “
( 1- 484) copied

இ-ள்:
மக்கள் என்று கருதப்படும் பொருளை உயர்திணை என்று சொல்வர், மக்கள் என்று கருதப்படாத பிற பொருளை அஃறிணை என்று சொல்வர். அவ்விரு திணைமேலும் சொற்கள் நிகழும் எ-று
( திணை என்றால் ஒழுக்கம் எனப் பொருள்படும். எனவே இது ஒழுக்கமுடைய மக்களையே குறித்தது என்பது இளம்பூரணர் கருத்தாம். ஆதலாலே உயர்திணைச் சொல், அஃறிணைச் சொல் என்று குறிக்காது, அஃறிணை உயர்திணை என்று பொருள் கருதி உரைக்கப்
பட்டது என்பார் சேனாவரையர். திணை குறித்த விளக்கங்களுக்கு
‘ பொருளதிகாரம் ‘ பார்க்க) copied

2
இங்கு உயர் திணைக்குப் பால் வேறுபாடுகள் மூன்று என மொழிகிறார்.
” ஆடூஉ அறிசொல் மகடூஉ
அறிசொல்
பல்லோ ரறியும் சொல்லொடு சிவணி
அம்முப் பாற்சொல் உயர்திணை யவ்வே “
( 2-485)
இ-ள்:
ஆடூஉ என்ற ஆணறி சொல்லும், மகடூஉ என்ற பெண்ணறி சொல்லும், பல்லோர் அறியும் சொல்லொடு பொருந்தி, அம்மூன்று பால் சொல்லும் உயர்திணையனவாம்
எ- று copied

ஆடூஉ அறிசொல் — ஆண்பால் சொல்
மகடூஉ அறிசொல் — பெண்பால் சொல்
பல்லோர் அறிசொல் — பலர்பால் சொல்.

எ- டு:
குமரன் – ஆண்பால்
குமரி – பெண்பால்
பிள்ளைகள் – பலர்பால். copied

3
” ஒன்றறி சொல்லே பலவறி சொல்லென்
றாயிரு பாற்சொல் அஃறிணை யவ்வே ” ( 3-486)
இ-ள்:
ஒன்றனை அறியும் சொல்லும், பலவற்றை அறியும் சொல்லும் என அவ்விரு சொல்லும் அஃறிணைக்கு உரியனவாம் எ-று
ஒன்றறி சொல் – ஒன்றன் பாற் சொல்,
பலவறி சொல் – பலவின் பாற் சொல். copied

எ-டு:
மரம் — ஒன்றன் பால்
மரங்கள் — பலவின் பால்,
அஃறிணையிலும் ஆண்-பெண் வேறுபாடு உண்டென்பதால், இங்கு பால் கூறினார். ஒருமை/பன்மை என்பது இன்றைய வழக்கு. copied
4
ஆண்பாலுக்கு ஈறு சொல்வதிது. பெயர்ச் சொற்கள் பால், திணை போன்றவற்றைத் தெளிவாகப் பல சந்தர்ப்பங்களில் காட்டுவதில்லை என்பதால், இப் பால் அடையாளத்திற்கென ஈற்றெழுத்துகளைத் தொல்காப்பியர் கூறுகிறார்.
” ன ஃ கான் ஒற்றே ஆடூஉ அறிசொல் ” ( 5 – 488)
இ-ள்:
ன ஃ கானாகிய ஒற்று ஆடூஉ – ஆண் – அறிசொல்லாம் எ-று
எ-டு:
உண்டனன், உண்டான், கரியன், கண்ணன், நல்லன் – copied
5
அடுத்து, பெண்பாற்கு ஈற்றெழுத்தைச் சுட்டியுரைக்கிறார்.
” ள ஃ கான் ஒற்றே மகடூஉ அறிசொல் ” ( 6 – 489)
இ-ள்:
ள ஃ கானாகிய ஒற்று மகடூஉ – பெண் – அறி சொல்லாம் எ-று
எ-டு:
உண்டனள், உண்டாள், செய்யாள், விழியாள்.
” அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்தோம் புவா னில் ” – குறள் – copied

6
இங்கு பலர்பால் ஈறுகள் எவை எனக் குறிக்கிறார்.
” ர ஃ கான் ஒற்றும் பகர இறுதியும்
மாரைக் கிளவி உளப்பட மூன்றும்
நேரத் தோன்றும் பலரறி
சொல்லே ” ( 7 – 490)
இ-ள்:
ர ஃ கானாகிய ஒற்றும் பகரமாகிய இறுதியும், மார் என்னும் இடைச் சொல்லும் ஆகிய இம்மூன்றும் பலரறி சொல்லாம் எ- று

எ-டு:
உண்டனர், உண்டார், உண்பர், உண்பார், உண்ப, வருப, என்ப, ஐயர்மார், ஆசிரியர்மார்.
அபி/ அந்தாதிப் பாடலில் இந்த ர் என்ற பலரறி சொல் 10 தடவைகள் வருகின்றன.
” வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்/ சிந்திப்பவர் நாற்றிசை நாரணர் சிந்தையுள்ளே / பந்திப்பவர் அழியாப் பரமானந்தர் பாரில் உன்னை/ சந்திப்பவர்க் கெளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே “

வள்ளுவரும்,
” கண்என்ப ஏனை எழுத்து என்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு ” ( குறள் – 392)
( என்ப – என்பர். இருவழிப் பொருள் கொள்ளலாம்)- copied

7
இனி ஒன்றன் பாலீறுகளைக் காட்டுகிறார்:
” ஒன்றறி கிளவி தறட ஊர்ந்து
குன்றிய லுகரத் திறுதி யாகும் ” ( 8-491)
இ-ள்:
ஒன்றறி சொல்லாவது தறட என்னும் ஒற்றை ஊர்ந்த குற்றியலுகரத்தை
இறுதியாகவுடைய சொல்லாம் எ-று

ஒன்று என்றது ஒருமையை.
த்+உ = து
ற்+உ = று
ட்+உ = டு
எ-டு :
யானை பிளிறியது.
சேவல் கூவிற்று.
குண்டு கட்டு ( தவளைக் கண்)

  • இவ்வகுப்பு நிறைவு –